கைது 
செய்திகள்

குஜிலியம்பாறை அருகே லாட்டரி விற்றவர் கைது

குஜிலியம்பாறை அருகே லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், சேர்வைகாரன்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (வயது 65) என்பவர், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.