அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பதிதார் இன மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் படேல். இவர் மீது பல்வேறு வழக்குகளை மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஹர்திக் படேல் காரை போக்குவர்த்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவரது கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாலை விதிகளை மீறியதாக ஹர்திக் படேலுக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.