மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கூடலூர்:

கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 44). இவர் நேற்று முன்தினம் வீட்டில் சமையல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு சேதமடைந்து கிடந்த மின் ஒயரில் அவரது கைப்பட்டது . இதனால் விஜயலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயலட்சுமியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.