செய்திகள்

கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், செல்வராகவன் மற்றும் போலீசார், கெலமங்கலம் ரயில்வே நிலையம் மற்றும் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்க பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த கெலமங்கலம் முருகேசன் (35), மாதேஷ் (28), மஞ்சுநாத்(23), கிருஷ்ணன்(29), செட்டிப் பள்ளி ரமேஷ் (30), தொட்டகானப்பள்ளி லோகேஷ் (29), கெலமங்கலம் சுரேஷ் (24), சசிகுமார்(34), அண்ணா நகர் கோவிந்தன் (42) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பணம் ரூ 450யை பறிமுதல் செய்தனர்.