செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய மாநிலம் சென்றிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது இட்லி, சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்ன தகவல்கள் பொய். ஜெயலலிதாவை கவர்னர் உள்பட யாருமே பார்க்கவில்லை என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக பேசியது திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.


இந்த நிலையில் தமிழக அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.