செய்திகள்

கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் மோசடி - 4 மாநிலங்களில் அமலாக்க துறை சோதனை

கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக 4 மாநிலங்களில் மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். #Gomtiriver #ED

உத்தரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு வளர்ச்சி திட்டம் கடந்த சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,500 கோடியில் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போதைய மாநில பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.