சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தேனாம்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் தனித்தன்மை யோடு இருக்க வேண்டும். செயல்பட வேண்டும். மத்திய அரசு இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி மேற் கொண்டு வருகிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும்.
இந்த நிறுவனம் தனித் தன்மையோடு செயல்பட்டால் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அதை நீர்த்து போகும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இரு கண்டனத்துக்குரியது. தமிழின் தனித்தன்மையை குறைக்கும் செயல் ஆகும். உடனே மத்திய அரசு பழைய நிலையிலேயே இந்த நிறுவனம் செயல்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜி.கே.வாசன் முன்னிலையில் மாற்று கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் த.மா.கா.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், முனைவர் பாட்ஷா போரூர் ஆனந்தராஜ், அன்னை ஜெகன், எல்.கே.வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.