காந்தி எம்.எல்.ஏ. நிவாரண பொருட்கள் வழங்கிய காட்சி. 
செய்திகள்

400 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்- காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்

அரக்கோணம் அருகே 400 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை திமுக செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்.

மாலை மலர்

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே பாராஞ்சி அடுத்த நந்திவேடந்தாங்கள் கிராமத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. 400 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சவுந்தர் தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் சக்கரவர்த்தி, மூர்த்தி, அசோசன், வினோத் முன்னிலை வகித்தனர். தமிழ்மணி வரவேற்றார். 

முடிவில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.