அரக்கோணம்:
அரக்கோணம் அருகே பாராஞ்சி அடுத்த நந்திவேடந்தாங்கள் கிராமத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. 400 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சவுந்தர் தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் சக்கரவர்த்தி, மூர்த்தி, அசோசன், வினோத் முன்னிலை வகித்தனர். தமிழ்மணி வரவேற்றார்.
முடிவில் ஜெயக்குமார் நன்றி கூறினார்.