பயங்கரவாதிகளை தாக்கும் ராணுவத்தினர் 
செய்திகள்

ஈராக் - ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை

ஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார். ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை.

இந்நிலையில், ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த டியாலா மாகாணத்தில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை நோக்கி ஈராக் ராணுவத்தினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.