மன்னார்குடி பகுதியில் போலி மதுபானங்கள் பார்களில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்காணித்தனர்.
அப்போது, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் மதுபானங்களை வாங்கி வந்து, தமிழக மதுபாட்டில்களில் நிரப்பி டாஸ்மாக் மதுபானம் போன்று மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.