அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்னர் காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக, சோஹ்னா தொகுதியில் 5 கோடி ரூபாய் பெற்றுகொண்டு வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அசோக் தன்வர், சீட் வழங்கும் நடைமுறையே நியாயமாக இல்லாதபோது
வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.