செய்திகள்

சென்னையில் இருந்து சென்ற கார் சித்தூர் அருகே லாரி மீது மோதியதில் 5 பேர் பலி

சென்னை விமான நிலயத்தில் இருந்து சென்ற கார் ரேணிகுண்டா அருகே லாரி மீது நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சிலர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் தங்களது உறவினரை அழைத்து செல்வதற்காக காரில் மீனம்பாக்கத்துக்கு வந்திருந்தனர்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா மண்டலத்துக்குட்பட்ட மாமண்டூரு என்ற இடத்தில் எதிர்திசையில் இருந்து வந்த லாரி இன்று அதிகாலை அந்த காரின்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கங்காதரம்(35), அவரது மனைவி விஜயாம்மா(30), சகோதரர் பிரசன்னா(32), மைத்துனி மரியம்மா(25) மற்றும் ஒன்றரை வயது குழந்தை என 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.