செய்திகள்

படகு பழுதானதால் நடுக்கடலில் 20 மீனவர்கள் தத்தளிப்பு

லட்சத்தீவு அருகே படகு பழுதானதால் மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் மீன்பிடிக்க கடந்த 18ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றுள்ளனர். லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது 2 படகுகள் திடீரென பழுதடைந்துள்ளது. 

படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தத்தளித்து வருகின்றனர். இவர்கள் குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.