செய்திகள்

படகு பழுதானதால் நடுக்கடலில் 20 மீனவர்கள் தத்தளிப்பு

லட்சத்தீவு அருகே படகு பழுதானதால் மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

சென்னை:

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் மீன்பிடிக்க கடந்த 18ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றுள்ளனர். லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது 2 படகுகள் திடீரென பழுதடைந்துள்ளது. 

படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தத்தளித்து வருகின்றனர். இவர்கள் குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT