செய்திகள்

காசிமேட்டில் கடலில் மூழ்கி மீனவர் பலி

காசிமேட்டில் கடலில் மூழ்கி மீனவர் குழந்தைராஜ் பலியானார். அவரது உடல் அதே பகுதியில் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. #Fishermandeath

ராயபுரம்:

காசிமேடு, காசிபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 50). மீனவர். இன்று அதிகாலை அவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பழைய மீன் ஏலம் விடும் பகுதிக்கு சென்றார்.

அப்போது அவர் நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதில் கடலில் மூழ்கி குழந்தைராஜ் பலியானார். அவரது உடல் அதே பகுதியில் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. #Fishermendeath

SCROLL FOR NEXT