செய்திகள்

மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை - டெல்லியில் பரிதாபம்

டெல்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவருடன் ஹவுஸ் காஸ் பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் தான் குடியிருக்கும் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்ற அந்த பெண் திடீரென்று கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhi