செய்திகள்

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.10 கோடி வழங்கியது தமிழக அரசு

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.

மாலை மலர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.