எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதனுடன் சேர்த்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர், ஏ.கே.போஸ் மறைவால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான அ.தி.மு.க. தயாராகி வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் முன்கூட்டியே களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அ.தி.மு.க. நிர்வாகிகள் 20 தொகுதிகளிலும் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.