பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முரளி விஜய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.