உயிரிழப்பு 
செய்திகள்

வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வயலில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராஜசேகர் என்பவர் பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்திருந்த உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.