செய்திகள்

டெல்லி, ஆந்திரா, கோவாவில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23-ல் இடைத்தேர்தல்

ஆந்திரப்பிரதேசம், கோவா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

கோவாவில் முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் போட்டியிடும் பனாஜி தொகுதி மற்றும் வால்போய், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நந்தியால் மற்றும் டெல்லியில் உள்ள பவானா சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம், கோவா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘கோவா, டெல்லி, ஆந்திரப்பிரதேசத்தில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் ஜூலை 29ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.