செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்

வேல்முருகனை கைது செய்ததை கண்டித்து வாழ்வுரிமை கட்சியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கேரள மாநிலத்தில் இருந்து விஷ்வ இந்து பரி‌ஷத்தின் ரதயாத்திரை தமிழகத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டி சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ரெயில் மூலம் செல்ல முயன்ற போது செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதை கண்டித்து சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி தனியார் சுங்கச்சாவடி முன்பு நள்ளிரவு 12 மணிக்கு ஓன்று கூடினர்.