மேற்கு வங்காளத்தில் நிலஅதிர்வு: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு ஆனது.
வடகிழக்கு மாநிலங்கள், டெல்லியில் அவ்வப்போது நிலஅதிர்வு ஏற்படும். அந்த வகையில் இன்று காலை மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் 7.54 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.