செய்திகள்

திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது - துரைமுருகன்

திமுகவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin

மாலை மலர்

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-

உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார்.

தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர்.