தெலுங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த 2 பேர் தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய அந்த பெண் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த 2 பேரும் பெண் ஊழியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த ஊழியரின் அறிவுரையின்படி இருவரும் அவரது காலில் விழுந்தனர்.