உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லை. இரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பேரழிவு ஏற்படுத்துகிற ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.