காஞ்சீபுரம்:
கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி ஊரக மற்றும் நகர்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தநிலையில், அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களில் மக்கள் கடன் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மேற்படி குழுக்கள் பெற்ற கடன் தவணை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக்கோரி வற்புறுத்த வேண்டாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மேலும் புதிதாக கடன் உதவி தேவைப்படும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவிடலாம்.
இதுதொடர்பாக நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் மற்றும் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் விவரம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 044-27236348 / 9342340815 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.