செய்திகள்

காரைக்குடியில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம்

காரைக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.

காரைக்குடி:

காரைக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து நகர,ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன்,மாவட்ட பொருளாளர் துரைராஜ், நகர செயலாளர் குண சேகரன் முன்னிலை வகித்தனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞரணியின் பங்கு குறித்தும் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் நகரம், ஒன்றியம் வாரியாக ஆலோசனை வழங்கினார்.

இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய பொறுப் பாளர்குழு தலைவர் ஆனந்த், மகளிர் அமைப்பாளர் ஹேமாசெந்தில்,காரைக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி,துணை அமைப்பாளர் சக்தி, தேவகோட்டை இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், துணை அமைப்பாளர் அப்துல் ஜாபர், காளையார்கோவில் ஒன்றிய துணை அமைப்பாளர் சாய் கார்த்திக், காரைக்குடி நகர துணை செயலாளர் கண்ணன்,மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார்.