வடவள்ளி,
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறி யியல் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகத்தின் சார்பாக மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் ஆர்.முருகேசன் மற்றும் துணைத்தலைவர் பி.தமிழரசி முருகேசன் பங்கேற்றனர். இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன. அவற்றுள் முதலாவதாக குமரகுரு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 50 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.
கே.ஜி.ஐ.எஸ்.எல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 42 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். ஜி.சி.டி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜமூர்த்தி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.