கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தின் பேரில் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லியம்பாளையம் ரயில்வே பெரிய பாலம் அருகே 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெரிய சாமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.