கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கம்பத்தில் இளம்பெண் மாயம்

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார்.புகாரின் பேரில் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

கம்பம்:

கம்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி லதா (வயது 33).

இவர் தனியார் கார்மென்சில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களாக கேரளாவுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது கணவர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.