கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

சம்பவத்தன்று நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மாலை மலர்

தேவதானப்பட்டி:

ஜெயமங்கலம் அருகே உள்ள பள்ளிவாசல் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லிசானுல்ஹசன் (வயது 25). இவர் மதுரையில் ஏ.சி. மெக்கானிக் படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் தந்தை ஜாகீர் உசேன் (55). ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலி பரை தேடி வருகின்றனர்.