கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

கோம்பை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலசொக்கநாதபுரம்:

கோம்பை அருகே கரியணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(21). இவர் சம்பவத்தன்று பண்ணைப்புரம் கரியணம்பட்டி கட்டிடம் அருகே உள்ள குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.