கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.பைக்கில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் போலீசார் கைது செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பிஓடிவிட்டனர்.

ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரதீபன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய சதிரேஸ்வரன், அம்மாவாசி ஆகியோரை தேடி வருகின்றனர்.