ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது52). கூலித்தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.