கங்கோத்திரியிலிருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும்சிவனடியார்குழுவினர் எல்.என்.புரத்தில் இரவு தங்கி ஆசி வழங்கினர். 
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் சிவனடியார் குழுவினருக்கு வரவேற்பு

நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

கடலூர்:

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.