உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

 விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவருக்கு மது பழக்கம் இருந்தது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவராகவே வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.