மோசடி 
உள்ளூர் செய்திகள்

சிவகாசியில் நிலம் மோசடி

சிவகாசியில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காத்த நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவர் பாலாஜி நகரை சேர்ந்த ஜீவராஜிடம் 2011ம் ஆண்டு பிளாட் வாங்கினார்.

இந்த நிலையில் அதே இடத்தை காளியப்பன் என்ற காணியப்பன், அவரது மகன்கள் வீரபெரு மாள், மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சோலையம்மாள் என்பவருக்கு 2016ம் ஆண்டு பவர் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் 2020ம் ஆண்டு காளியப்பன் இறந்து விட்டார்.

இந்தநிலையில்  2021ம்  ஆண்டு சோலையம்மாள் மதுரையை சேர்ந்த குரு நாதனுக்கு இடத்தை விற் றுள்ளார். அப்போது காளியப்பன் உயிரோடு இருப்பதாக விருதுநகரை சேர்ந்த டாக்டர் கருணாகரன் என்பவரிடம் சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து தெரியவந் ததும் சிவகாசி கோர்ட்டில் ராஜாராம் வழக்கு தொடர்ந் தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி டவுன்  போலீசார்  சோலையம் மாள், குருநாதன், வீரபெருமாள், மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.