நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வைநகர் காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடியதாக சின்னவன், முருகன், முனுசாமி, குமார் உள்பட 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைதான அவர்களின் 6 இருசக்கர வாகனங்கள், பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.