கிராம சபா கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுதா, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.

பற்றாளர் தேவகுமார் கூட்டத்தை நடத்தினார்.

கூட்டத்தில் கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.