அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 27).
இவர் காட்டன் சூதாடியபோது போலீசார் மடக்கிபிடித்தனர். இதனையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.