அணைக்கட்டு:
பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி 6 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 20-ந் தேதிதூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிச்செல்வம் (வயது 25) என்பவர் சமையலராக வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் அவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். சுயநினைவின்றி கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருந்தனர். அதற்குள் மாரிச்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி பள்ளிகொண்டா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.