கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் சாவு

பரிசோதித்து இறந்ததாக தகவல்போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அடுத்த சதுப்பேரி, பெரிய அகமேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் மூலை கேட்டில் இருந்து கந்தநேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பைக் மீது சக்திவேல் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.