அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக் குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது.
முத்துக்கும ரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு தார்சாலையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடந்தது.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன். தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தார் சாலையை திறந்து வைத்து, மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு. தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன், துணைத் தலைவர் ரேணுகா தேவிபெருமாள்ராஜ், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி, ஒன்றிய கவுன்சிலர் அரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பீஞ்சமந்தை மலைக்கு என அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.