கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பட்டதாரி இளம்பெண் தற்கொலை

உடலை மீட்டு பிரேத பரிசோதனைபோலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சவுமியா சுந்தரி (வயது 27). எம்.எஸ்.சி பட்டதாரி.

சவுமியா சுந்தரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுமியா சுந்தரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT