உள்ளூர் செய்திகள்

மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி 2 யானைகள் அட்டகாசம்

நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன வனப்பகுதிக்குள் விரட்டினர்

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும் மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் 2 யானைகளும் நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன. அங்கு கோபிநாத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்தன.

இதனை அறிந்த விவசாயிகள் பட்டாசு, வெடி வெடித்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

யானைகள் அட்டகா சத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா வி.ஏ.ஓ. தனசேகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.