கும்பகோணம்:
கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்த சூரியனார் கோவில் காவேரி கரை அழகிரி மண்டபத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.