உள்ளூர் செய்திகள்

உடன்குடி சிவலூரில் சந்தனமாரிஅம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவி லில் வளைகாப்புவிழா நடை பெற்றது. பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி சிவலூர் காலனியில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலில் வளைகாப்புவிழா நடை பெற்றது.

பெண்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதனை அடுத்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு 7 வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஊர் தலைவர் பாலமுருகன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

இதில் ரகு, அஜித், மாதேஷ், மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.