திருச்சி:
திருச்சி டவுன் ஸ்டேஷன் ஸ்ரீ செல்வ மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம்,லட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ரக்சோகன ஹோமம், பூர்ணா ஹுதி, மகாதீபாரதனை நடைபெற்றது.
மிருத்சங்க் கிரகணம் அங்குரார் பணம் ரக்ஷா பந்தனம் கும்ப அலங்காரம், கழகார்ஷனம் யாகசாலை பிரவேசம் முதல் யாகபூஜை மகா தீபாரதனை நடைபெற்றது. நேற்று ஆச்சரிய விசேஷ சந்தி ஸ்ரீ சூக்த் ஹோமம் மூல மந்திர ஹோமம் பிரச்சாரய பூஜை, வடுகபூஜை, கன்யா பூஜையுடன் இன்று காலை கும்பாபிஷேக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், கவுன்சிலர் தங்கலட்சுமி தசரதன், முன்னாள் கவுன்சிலர் கண்ணன்மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.