மணப்பாறை,
மணப்பாறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து மர்ம நபர் சிறுமியை விட்டு விட்டு தான் வந்த மொபட்டில் தப்பிச்சென்றார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? சிறுமியை எதற்காக கடத்த முயன்றார்? என்பது குறித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பதை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.