சிவகிரி:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், சரஸ்வதி, நெல்கட்டும்செவல் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியராஜா, விஸ்வ நாதபேரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலர்கள், வேளா ண்மைத்துறை, வனத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிளை செயலாளர்கள், மகேந்திரன், ஸ்டாலின், மணிகண்டன், விக்கி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.